கிண்டல்கள்….கவிதைகள்..கள்…கள்…கள்….


கவிஞர் வாலிக்கு வயது ஆனாலும் அவரது வார்த்தைகள் என்றும் இளமையா இருக்கும்… அவரோட பழைய கவிதை. காதலி எழுதிய கடிதம் படித்து காதலன் எழுதுவது….இதோ (பொய்க்கால் குதிரைகள் தொகுப்பில் வந்தது. அக்னி சாட்சி படத்திலும் வந்த ஒன்று அது)

படித்தேன் படித்தேன் கடிதம்
அடடா வரிகள் அமுதம்
பேப்பர அரங்கம் முழுதும் –
உந்தன்
பேனா முனையின் நடனம்.

சாதாரணமா துளி தேன்..அவ்வளவு சுவை..படி நிறைய தேன் எப்படி இருக்கும்??

அதே போல் கள் & அமுதம் இரண்டும் சேர்ந்து கொடுக்கிறார்கள்..
கள் அதிகம் குடிக்கலாம்… அதிக நாள் உயிர் வாழ முடியாது..
அமுதம் கொஞ்சமா குடிச்சாலே அதிக நாள் உயிர் வாழலாம்..

கள் அமுதம் என்றால்…போதையும் இருக்கும்..அதிக நாள் இருக்கலாம்…மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் எல்லாம் இங்கே கிடையாது… என்ன மாதிரியான கிண்டல் பாத்தீங்களா??

சரி அது அப்படியே கிடக்கட்டும். சமீபத்தில் முகநூல் ஒன்றில் படித்தது:

உன் முகம் profile photo போல்
இருக்கும் என்று நினைத்தேன்
ஆனால்..அது
வாக்காளர் அட்டையில்
உள்ள படம் போல் இருக்கே…???

இது கிண்டல் தானே???

ஒரு நண்பர் கேட்டார்… நீங்க இருப்பது லிட்டில் அந்தமான்…அதாவது சின்ன அந்தமான். அந்தமானில் உள்ளவர்கள் சின்ன வீடு வேண்டுமென்றால் அந்த சின்ன அந்தமானுக்கு வருவாங்களா?? என்றார்.
இடைவெளியே விடாமல்..அப்போ சின்ன அந்தமானில் இருப்பவங்க எங்கே போவாங்க?? என்றும் கேட்டார்…

கிண்டல் என்பது அவருக்கு கைவந்த… இல்லை.. இல்லை… வாய் வந்த கலை.

டிங்க்டிங்க்டிங்க்……

என்ன இது ஃபோன்…??

ஒரு நிமிஷம்.. நம்பர் இல்லாத கால்….

வணக்கம்…கிருஷ்ணமூர்த்தி..
வணக்கம்.. நீங்க???

போன் குரல்: கம்பர் இப்பக்கம்….ஏதோ கிண்டல் பத்தி கிண்டல் பண்றதா தெரிஞ்சது…

நான்: (மூக்கிலே வேத்திடுச்சா…) நீங்க சீரியஸா..10000 பாட்டு எழுதி இருக்கீங்க… எதுக்கு உங்களை வம்புக்கு இழுக்கனும்னு தான்??

போன் குரல்: இந்த தடவை பாட்டு நம்பர் சொல்றேன்: நீ ஒன்னோட ஸ்டைல்ல எழுது. சூர்ப்பணகைப் படலம் – பாடல் 357…

டொய்ங்க்ங்க்ங்க்

(இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது)

அடடே..அங்கே..செம கிண்டல் ஒண்ணு கீதப்பா… கம்பரா..???  கொக்கா???

சூர்ப்பணகை இலக்குவனோடு சேத்து வைக்க எவ்வளவோ கேக்கிறா… ராமன் கிட்டே…

ராமன் என்ன மாமாவா??? அண்ணன்… அல்லவா?? தப்பான ரூட்…

கடைசியில் சூர்ப்பணகைக்கு ஒரு ஐடியா வருது… நேரே ராமனைப் பாத்து,

ராமனே…எல்லாத்துக்கும் முடியாதுன்னு சொல்லிட்டே…என்னையே ஒரு handicaped quota வில் கன்சிடர் செய்யலாமே – என்கிறாள்..(மூக்கு இல்லாத காரணத்தால்).

ராமனுக்குப் புரியவில்லை… மூக்கை இழந்தவள் மூளையே பிசகி விட்டதா என்று… அரக்கியே இது கோட்டாவே இல்லாத காலம் ஆளை விடு…என்கிறான் ராமன்..

ஏ..ராமா… பொய் சொகிறாய் நீ… நான் என்னவோ..10% தான் ஊனமானவள்…
ஆனால் நீ 100% ஒரு உறுப்பை ஊனமானவளை கூடவே வைத்துள்ளாயே??

ராமனுக்கு புரியவில்லை….

சூர்ப்பணகை தொடர்கிறாள்…”உன் சீதையைப் பார் … இடையே இல்லையே..”

இது எப்படி இருக்கு?? கிண்டலின் உச்சமா இல்லே…

இளையவன் தான் அரிந்த நாசி ஒருங்கு இலா இவளோடும்
உறைவெனோ என்பானேல் இறைவ ஒன்றும்
மருங்க்கு இலாதவளோடும் அன்றோ நீ
நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய்.

தேடல் தொடரும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s