ஒரு இளைஞன் சாமியாராக நினைத்து தன் அம்மவிடம் அனுமதி கேட்டான். (அப்புறம் முதல்வர் அம்மாவிடமா கேட்க முடியும்?)
அம்மா பையனுக்கு ஒரு சின்ன டெஸ்ட் வச்சாங்க. ஒரு சின்ன கத்தியை எடுத்து வரச் சொன்னாங்க. பையனும் கத்தியை கொண்டு போய் கொடுத்தான். உடனே அம்மா, நீ சாமியாராக போவதற்கு இன்னும் பக்குவம் வரவில்லை. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். என்றார். கொஞ்ச நாள் போனது. மீண்டும் கத்தி சோதனை தொடர்ந்தது. மீண்டும் அதே முடிவு… மூன்றாம் முறை அம்மாவிடமிருந்து உத்திரவு கிடைத்தது.. சாமியாராக போலாம் என்று..
இளைஞன் கேட்டான்…என்ன இது சோதனை?? எப்படி தேர்வு செய்தீர்கள் என்று கேட்டார் அந்த இளைஞர். கிடைத்த பதில் என்ன தெரியுமா?? முதல் இரண்டு முறையும் கைப்பிடி இளைஞன் கையிலும் கூரான முனை அம்மாவை நோக்கியும் இருந்ததாம். மூன்றாம் முறை கூரான முனை கையில் வைத்து தந்த காரணத்தால் அனுமதி கிடைத்தது.
அடுதவர் நலம் தான் சாமியாராய் போக முதல் தகுதி என்று அந்த அம்மா நினைத்திருக்கலாம்..
அதை விடுங்க… புகை ஒழிப்பு தினத்தன்று என் கையில் மைக் கிடைத்தது. நான் புகை பிடிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. அவர்களை நாய் கடிக்காது என்றேன்..
ஒரே சிரிப்பு.. விளக்கம் சொன்னேன்… அதிகம் புகை பிடித்தால்… நுரையீரல் பாதிப்பு அடையும்.. அதனால் கூன் விழும்… கையில் தடி ஊன்றி நடக்க நேரும்.. தடி இருந்தால் எந்த நாய் தான் கடிக்க வரும்??
தடியினை விட்டு மறுபடியும் ஒரு கத்தி கதைக்கு வருவோம்…
முல்லா நஜ்ருதீன் தன் இளம் மனைவியோடு ஒரு ஓடத்தில் போய்க் கொண்டு இருந்தார். திடீரென்று ஒரு கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார். வேடிக்கைக்காகத்தான்…
ஆமா..கல்யாணம் ஆன ஆரம்பத்தில் தானே இப்படி எல்லாம் விளையாட முடியும்… அப்புறம் கத்தி தான் மனைவி கையில் போய் விடுமே!!
இளம் மனைவி புன்முறுவலோடு இருந்தார். முல்லா கேட்டார்…என்ன பயமாய் இல்லையா என்று?? இளம் மனைவி சொன்ன பதில் தெரியுமா?? கத்தி கொடுமையான ஆயுதம் தான்… ஆனால் ஒரு முனை கொடூரமானதாய் இருப்பினும் இன்னொரு முனை அன்பே உருவான உங்களின் கை அல்லவா இருக்கு.. நான் ஏன் பயப்பட வேண்டும் என்றார்… கத்தி முனையில் அன்பு என்னும் ஆயுதம்…
இதே போன்ற ஒரு சிச்சுவேஷன் ராமாயணத்தில் வருது… கம்பர் அதனை எப்படி கத்தி வைத்து கையாள்கிறார் என்று பாக்கலாம்… இங்கு கத்திக்குப் பதில்…. அம்பு..
சுக்ரீவனுக்கு வந்திருப்பது ராமன் தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.. (ராமனுக்கே இந்த identity crises…) ஒரே அம்பில் ஏழு மரம் துளைத்துக் காட்டினால் தான் இராமன் என்பது நிரூபனம் ஆகும்.. Proof ஆகி விடுகிறது… அந்த வேகம் பாத்து அனைவரும் பயந்து போய் விடுகின்றனர்… ஆனாலும் அறத்திற்கு உறு துணையாய் இருப்பவர் உடன் இருப்பதால் கவலை லேது என்று ஜாலியா இர்ந்தாகலாம்…
ஜாலியா பாட்டும் பாக்கலாமே…
அன்னது ஆயினும் அறத்தினுக்கு ஆர் உயிர்த் துணைவன் என்னும் தன்மையை நோக்கினர் யாவரும்…..
தொடரும்….