ஏ ஜி… ஓ ஜி… 2G…. 3G.


சமீப காலமாய் ஐடியா மொபைல் அறிமுகம் செய்த 3G க்கு தரும் விளம்பரம் பாத்தீங்களா??

No Baby… Only 3G… என்று சொல்கிறது.

அதாவது 3G போன் இருந்தால் மக்கள் தொகை குறையும் என்ற சமூக அக்கறையில் விளம்பரம் வருது. கேக்கவும், பாக்கவும் நல்லாத் தான் இருக்கு. தொட்டில்கள் குறைவதும்.. சென்னை டிராபிக் திடீரென அந்தமான் ரோடு மாதிரி ஆவதும்.. இருந்தா நல்லா இருக்குமோன்னு தோணுது.

அந்தமானில் 3G ஆரம்பித்த புதிதில் சகட்டு மேனிக்கு எல்லாருக்கும் இலவசமாய் வழங்கிவிட்டார்கள்.

ஆனால் யாரும் பயன் படுத்துவதில்லை (நல்ல விஷயங்களுக்கு). சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யுது.

1. பொய் சொல்வது சிரமம். (சலூனில் இருந்து கொண்டு ஜரூரி மீட்டிங்க் மே ஹு என்று சொல்லித் தானே முதலில் மொபைல் வீட்டிற்குள் நுழைந்தது)

2. எப்போதும் போட்டோவுக்கு தயாரா நாம இருப்பதில்லை.

3. நம்ம முகம் நல்லா தெரிய நாம மொபைலை தள்ளி பிடிக்கனும். அப்போ புளு டூத் அல்லது ஹெட் போன் வச்சிருக்கனும் கூடவே (கங்காரு குட்டியை வச்சிட்டு திரியற மாதிரி). 

4. என்ன தான் 3G வசதி இருந்தாலும் அதை Hide Me என்பதை வைத்து சாதா போனா மாத்திக்கலாம்.

5. உங்களை உங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ போட்டோ வீடியோ எடுத்துவிடலாம். (வில்லங்கமா பேசினா அம்பேல் தான்).

6. இப்பொத் தான் Skype வீடியோ சாட் என்று தண்ணிபட்ட பாடா இருக்கும் போது, இந்த போனில் முகம் பாத்து பேசும் சங்கதி…எடுபடுமா??

7. எல்லா ஊரிலும், இடத்திலும் 3G வசதி இல்லையே?? பரமக்குடியில் 3G வரும் என்று, நானும் அம்மாவிடம் அந்தமானில் இருந்து பேச காத்திருக்கிறேன்..

சரி மறுபடியும் விளம்பரத்துக்கு வருவோம்… குடும்பக் கட்டுப் பாட்டுக்கு இது உதவுமா?

இப்படிப் பாத்தா அய்யன் வள்ளுவரே அதைப் பத்தி எழுதி இருக்காருன்னு நான் சொல்றேன்.. அதெப்படி கிமூ 2000 வருஷத்துக்கு முன்னாடி குக பத்தி எழுதி இருக்க முடியும்??

நிலத்தின் தாங்கு திறன் (Bearing Capacity) பாத்து தான் பில்டிங்க் கட்டனும். புரியலையே… புரியும் படி சொல்லனும்னா.. “குடி”மக்கள் தங்களின் தாங்கு திறன் பாத்து தான் தண்ணி அடிக்கனும்.

என்ன தான் வண்டி பக்கவா இருந்தாலும் ஒரு மயில் இறகு ஓவர் லோடு ஆனாலும் வண்டி கொடே சாஞ்ச்சிடும். வண்டியே அப்படின்னா??? குடும்பம் மட்டும் அளவுக்கு மீறினா??

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

நாம ஆசை ஆசையா ஒரு மொபைல் வாங்கினா.. அடுத்த பார்வையே… அடுத்தவன் மாடல் என்ன என்று பாக்கத்தான் கண் ஒடும்.

ஒரு பழைய சிவாஜி படம். அதில் சிவாஜிக்கு காலில் பிரச்சினை. சக்கர நாற்காலியில் இருப்பார். கேமிரா அதை முதன் முதலில் காட்டும் போது மற்ற அத்தனை பேரின் கால்களை காட்டும். என்ன ஒரு கேமிரா கோணம் (Angle)??

ஆனா அதற்கு அப்பாற் பட்டவர் நம்ம மஹாத்மா காந்தி. கோட்டு சூட்டு போட்ட ஆட்கள் மத்தியில் கம்பீரமா துண்டு கட்டி பீடு நடை போட்டவர் அவர். அதனால் தான் அவர் மஹாத்மா..

சிலர் பொண்டாட்டி இல்லாத நேரத்தில் மட்டும் ஃபேஸ்புக்கில் வருவதால் ஏழுதுபவர்கள் எல்லாரும் அப்படித்தான் போல் என்று நினைக்கிறார்கள்..

இப்படித்தான் பொண்டாட்டியைக் காணாமனு ஒருத்தர் போயிட்டே இருக்கார். ஒரு சத்தம் கேக்குது. எவ அவ..? என்று திரும்பிப்பாத்தா அங்கே ஒரு அன்னமும் திரும்பிப் பாக்குதாம். அவரு நெனைக்கிறார்.. ஓ..இதுவும் மனைவியைப் பிரிஞ்சதாய் இருக்குமோன்னு பாக்குறார்.

அதுவும் காதலால் ஒன்றினைந்த அன்ன ஜோடி பிரிந்து இருக்காம். உடலும் உயிருமா இருந்த ஜோடியில் உயிர் பிரிஞ்ச மாதிரி பிரிவு அந்த அன்னத்திற்கு. அப்போ ஒரு குளம். அதிலே சில பிகர்கள் குளிக்க வருதாம். அவுக கால் கொலுசு சத்தம் போடுதாம். அது ஆண் அன்னம் காதில் விழுந்து அட.. என் பொஞ்சாதி வந்திட்டாளோன்னு பாத்ததாம்.

இது ராமன் நிலையில் இருந்து கம்பன் பார்க்கும் ஒரு நீர் நிலையின் காட்சி.

இந்த இடத்தை விட்டா அப்புறம் பாட்டு போட முடியாது..

தானுயிர் உறத் தனி தழுவும் பேடையை

ஊனுயிர் பிரிந்தென பிரிந்த ஓதிமம்

வானர மகளிர் தம் வயங்கு நூபுரத்

தேனுகு மழலையைச் செவியின் ஓர்ப்பது. 

அடுத்த பாட்டை கொஞ்சம் பின்னர் எட்டிப் பாப்போம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s